Skip to main content

விசாரணை முடிவடைந்த பின்னர் எமது கட்சி உண்மை நிலையை வெளிப்படுத்தும் - சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்!

Sep 01, 2020 231 views Posted By : YarlSri TV
Image

விசாரணை முடிவடைந்த பின்னர் எமது கட்சி உண்மை நிலையை வெளிப்படுத்தும் - சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்! 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்



தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி  மத்திய குழுவில் 30 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மாத்திரமல்லாமல் எங்கள் கட்சிக்கு எட்டு மாவட்டங்களிலும் கிளைகள் காணப்படுகின்றன. அந்த எட்டு மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள்  மத்திய குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள்.



இந்நிலையில் 30 பேர் கொண்ட காத்திரமானதொரு மத்திய குழு மணிவண்ணன் தொடர்பான விவகாரத்தை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, விசாரணைகளின் முடிவில் சகல விடயங்களும் மக்களுக்குதெரியப்படுத்தப்படும் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க. சுகாஸ் தெரிவித்துள்ளார். 



மணிவண்ணன் தொடர்பான விவகாரம் இன்னும் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதொரு விடயம். குறித்த விவகாரம் இற்றைவரை முற்றுப் பெறவில்லை. முற்றுப் பெறாததொரு விடயத்துக்கு விசாரணைகள் முடிவுபெறாத கட்டத்தில் நாங்கள் எடுத்த எடுப்பிலே முடிவுகளை அறிவிக்க முடியாது.



எங்கள் கட்சியைப் பொறுத்தவரை முடிவுகளை எடுத்துவிட்டு விசாரிக்கின்ற கட்சி கிடையாது. சில தரப்புக்கள், சில கட்சிகள் முடிவுகளை எடுத்துவிட்டு விசாரணை செய்கின்ற காரணத்தால் அவர்களால் முதலிலேயே முடிவுகளை அறிவிக்க முடிகிறது. ஆனால், எங்கள் கட்சி அப்படியானதொரு கட்சியல்ல. ஒரு ஜனநாயக கட்சி எனவும் எமது கட்சியின் கொள்கைக்கு ஏற்ப முடிவினை எமது கட்சிஎடுக்கும் என  தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை