Skip to main content

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்தபெற்றோர் குழந்தைகளை பராமரிப்பதில் கஸ்டநிலைமை!

Sep 04, 2020 236 views Posted By : YarlSri TV
Image

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்தபெற்றோர் குழந்தைகளை பராமரிப்பதில் கஸ்டநிலைமை! 

கட்டுவன் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் இந்த வருடம் மார்ச் மாதம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த நிலையில் பிள்ளைகளுடன் பூரணகுணமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை பராமரிப்பு பிரிவில் வெளியேறியுள்ள நிலையில் தற்போது குழந்தைகளை வளர்ப்பதில் குறித்த பெற்றோர் பொருளாதார நிலையில் பாரிய பிண்ணடைவினை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் உதவி செய்யவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் குழந்தை வைத்திய நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் அவர்களின் விசேட கண்காணிப்பின் கீழ் குழந்தைகளுக்கான மாதந்த சிகிச்சை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மூன்று ஆண்குழந்தைகளும், ஒரு பெண்குழந்தையும் அடங்கலாக நான்கு குழந்தைகளை மேற்படி பெற்றோர் பிள்ளைகளை வளர்ப்பதில் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து உதவிகளை பெறுவதற்கு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் வழிவகைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ள நிலையில் குறித்த பெற்றோருக்கு இதுவரை எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. போதிய தாய்ப்பால் இல்லாத நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு பால்மாபெட்டியினை தாம் வாங்க வேண்டிய நிலைக்கு உள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை