வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!
Sep 03, 2020 306 views Posted By : YarlSri TV
வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியிலும் விளையாட இருந்தார். இந்நிலையில், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில், ஐபிஎல் லீக் போன்ற சிறந்த தொடரில் இருந்து விலகுவது கடினமான ஒன்று. உலகின் தலைசிறந்த லீக்குகளில் ஒன்று ஐபிஎல். முதல் குழந்தை பிறக்க இருப்பதால் வீட்டில் சவால்கள் நிறைந்துள்ளன என்று கூறியுள்ளார்.
குழந்தை பிறக்கும் நேரத்தில் வீட்டில் இல்லாமல் இருக்கும் ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. ஐபிஎல் போட்டியை தவற விடுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், இன்னொரு முறை ஐபிஎல் போட்டிக்கான வாய்ப்பு வரலாம் என கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், குழந்தை பிறக்கும்போது மனைவி அருகில் இருக்கும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் நான் நினைக்கவில்லை என்று கூறினார். கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஐபிஎல் போட்டி அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து அணிகளும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
7 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
7 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
7 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
7 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
7 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago