Skip to main content

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்!

Aug 30, 2020 265 views Posted By : YarlSri TV
Image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்! 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதமும் முப்பதாம் திகதி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டமே இன்றைய தினமும் மேற்கொள்ளப்பட்டது.



குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் முன்பாக இடம்பெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 859 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இதன்போது அவர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், தமது பிள்ளைகள், உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தமாறு தெரிவித்து சுமார் 1 மணிநேரம் ஏ9 வீதியின் ஓரத்தில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை