Skip to main content

இத்தாலி கடல்பகுதியில் அகதிகள் சென்ற படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

Sep 01, 2020 245 views Posted By : YarlSri TV
Image

இத்தாலி கடல்பகுதியில் அகதிகள் சென்ற படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு 

உள்நாட்டுப் போர் காரணமாக, பல்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்கள் அகதிகளாக இத்தாலிக்கு சட்டவிரோதமாக பயணம் மேற்கொள்கின்றனர்.



இந்நிலையில், அகதிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று, இத்தாலிக்கு சென்றது. படகை வழிமறித்த கடலோர காவல் படையினர், அகதிகளை மீட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, படகு திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. 21 அகதிகளில் 13 பேர் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.



இதில், மூன்று பேர் உயிரிழந்தனர், ஒருவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவர்களை கடலோர காவல் படையினர் காயங்களுடன் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை