Skip to main content

சி.வி.விக்னேஸ்வரனின் உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது - மனோ கணேசன்

Aug 31, 2020 242 views Posted By : YarlSri TV
Image

சி.வி.விக்னேஸ்வரனின் உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது - மனோ கணேசன் 

சி.வி.விக்னேஸ்வரனின் உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது என எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேட்டுக் கொண்டார்.



கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



அது அவரது தனிப்பட்ட கருத்து என்றே நான் கூறவேண்டும்..  சபாநாயகரே அதற்கு பதிலளித்து விட்டார். எனவே, இனியும் இதனை விவாதப் பொருளாக கருதக்கூடாது.



ஏனெனில், இதற்கு முன்னரும் நாடாளுமன்றில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி என்பது இலங்கையின் மூத்த மொழியா – இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், தமிழ் மொழி உலகிலேயே பழைய மொழியாகும்.



இதற்கான சான்றுகளும் உள்ளன.எனவே, இதனை பெரிதுப்படுத்தக்கூடாது. இதனை இனவாதமாகக் கருதக்கூடாது. இனவாதமாக கருத்துக்களை வெளியிட்டு, மக்களை குழப்பியடிக்கவும் முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை