Skip to main content

அதிபர் பதவி விலகக்கோரி 3-வது வாரமாக தொடரும் போராட்டம் - சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பு!

Aug 31, 2020 299 views Posted By : YarlSri TV
Image

அதிபர் பதவி விலகக்கோரி 3-வது வாரமாக தொடரும் போராட்டம் - சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பு! 

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் 



நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ (66) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.



இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.



26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.



மேலும், அலெக்சாண்டர் பதவி விலகவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போராட்டக்காரர்களின் கோரிக்கையை அதிபர் நிராகரித்தார்.



இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் அதிபருக்கு எதிராக கடந்த 3 வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், தலைநகர் மின்ஸ்க்கில் நேற்று திரண்ட திரளான மக்கள் அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக்கக்கோரி கோஷங்களை எழுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



போராட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் வரை பங்கேற்றிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 



ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளால் பெலாரசில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.



அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ நேற்று தனது 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

24 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

24 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

24 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

24 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

24 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

24 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை