Skip to main content

22 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா!

Aug 26, 2020 263 views Posted By : YarlSri TV
Image

22 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா! 

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.



இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.



இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது.



தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 40 லட்சத்து 42 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 28 ஆயிரத்து 852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 719 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.



கொரோனாவில் இருந்து 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 22 ஆயிரத்து 499 பேர் உயிரிழந்துள்ளனர்.



கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-



அமெரிக்கா - 1,82,375



பிரேசில் - 1,16,66



மெக்சிகோ - 60,800



இந்தியா - 58,390 



இங்கிலாந்து - 41,449



இத்தாலி - 35,445



பிரான்ஸ் - 30,544



ஸ்பெயின் - 28,924



பெரு - 27,813



ஈரான் - 20,901


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை