இந்தியா : 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!
Aug 29, 2020 267 views Posted By : YarlSri TV
இந்தியா : 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,021 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 62,550 -ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 77,266 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்தது.
உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1,021 உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 62,550 -ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதித்து தற்போது நாடு முழுவதும் 7,52,424 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 26,48,999 ஆகவும் உள்ளது.
அமெரிக்காவில் ஜூலை மத்தியில் உலகிலேயே மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 77,255 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதே இதுவரை அதிகபட்ச கரோனா பாதிப்பாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு: 34,63,973
பலி: 62,550
குணமடைந்தோர்: 26,48,999
சிகிச்சை பெற்று வருவோா்: 7,52,424
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago