5 ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி!
Aug 28, 2020 262 views Posted By : YarlSri TV
5 ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி!
பிரான்சில் இருந்து அண்மையில் வாங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி சேர்த்து கொள்ளப்படவுள்ளன.
பிரான்சின் 36 ரபேல் விமானங்களில் முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 5 விமானங்கள் அரியானா மாநிலம் அம்பாலா விமான படைதளத்தை ஜூலை 29ம் தேதி வந்தடைந்தன. அந்த விமானங்கள், இந்திய விமானப்படையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் சேர்க்கப்படவுள்ளன.
செப்டம்பர் 4 முதல் 6 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் ரஷியாவில் இருந்து திரும்பிய பின்னர் விழா நடைபெறும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிகழ்ச்சிக்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு இந்திய விமானப்படையின் 17ஆவது கோல்டன் அரோஸ் படைப்பிரிவின் அங்கமாக 5 ரபேல் விமானங்களும் திகழும்.
அடுத்த 10-12 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 300 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தேவைப்படுகின்றன, அது இந்திய மற்றும் வெளிநாடடுகளில் இருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago