என்னைக் கொள்ள முயற்சி”..! பங்களாதேஷ் பிரதமர் “ஷாக்”..!
Aug 21, 2020 256 views Posted By : YarlSri TV
என்னைக் கொள்ள முயற்சி”..! பங்களாதேஷ் பிரதமர் “ஷாக்”..!
திடுக்கிட வைக்கும் சம்பவமாக, பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தலைவர் கலீதா ஜியா மற்றும் அவரது மூத்த மகன் தாரெக் ரஹ்மான் ஆகியோர் 2004’ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த கையெறி குண்டுத் தாக்குதலில் தன்னை படுகொலை செய்ய விரும்பியதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
ஆகஸ்ட் 21, 2004 அன்று டாக்காவின் பங்கபந்து அவென்யூவில் அவாமி லீக் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்பு பேரணியின் போது நடந்த தாக்குதலின், 16’வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றியபோது ஹசீனா இந்த பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.
இந்த தாக்குதலில் அப்போதைய மொஹிலா அவாமி லீக் தலைவர் மற்றும் மறைந்த ஜனாதிபதி ஜில்லூர் ரஹ்மானின் மனைவி ஐவி உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500’க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
“கலீதா ஜியா மற்றும் அவரது மூத்த மகன் தாரெக் ரஹ்மான் ஆகியோர் பங்கபந்து அவென்யூ மீதான கையெறி குண்டு தாக்குதலில் என்னைக் கொல்ல விரும்பினர். அப்போதைய சில்ஹெட்டில் இருந்த பிரிட்டிஷ் தூதர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.”
“நான் அவர்களின் முக்கிய இலக்காக இருந்தேன்.” என்று ஹசீனா கூறினார்.
பங்களாதேஷ் பிரதமர் மேலும், வெடிகுண்டு தாக்குதலுக்கு முன்பு, அவாமி லீக் அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்று கலீதா ஜியா கூறியதாகத் தெரிவித்தார்.
“நாட்டின் சுதந்திரம் மற்றும் விடுதலைப் போர் உணர்வில் அவர்கள் நம்பாததால் கொலைகளைச் செய்வது அவர்களின் பழக்கம்” என்று குற்றம் சாட்டிய ஹசீனா, “ஊழல் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாக அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினர்” என்று கூறினார்.
அப்போதைய பி.என்.பி-ஜமாத் அரசாங்கம் பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும் கூட்டி, அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் ஹசீனா கூறினார்.
“அப்போதைய பிஎன்பி-ஜமாத் அரசாங்கம் கையெறி தாக்குதலில் நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் இறக்கவில்லை என்று அவர்கள் அறிந்ததும், அவர்கள் தீவிரவாதிகளை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தனர்.” என்று அவர் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago