பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் அதிபர்கள் சந்தித்தபொழுது கொரோனா அச்சத்தினால் வணக்கம் தெரிவித்து கொண்டனர்!
Aug 21, 2020 240 views Posted By : YarlSri TV
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் அதிபர்கள் சந்தித்தபொழுது கொரோனா அச்சத்தினால் வணக்கம் தெரிவித்து கொண்டனர்!
சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி போயுள்ளது.
இதேபோன்று பல நாட்டு தலைவர்களின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து கொள்ளும்பொழுது மரியாதைக்காக கைகுலுக்கி கொள்வது வழக்கம். ஆனால் கொரோனா வைரசால், இந்த மரபு பின்பற்றப்படுவதில் அச்சமேற்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின்பொழுது, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வணக்கம் செலுத்தும் முறையை பின்பற்ற தொடங்கினர்.
இதுபற்றி நேதன்யாகு கூறும்பொழுது, கைகுலுக்குவதனை தவிருங்கள். வணக்கம் கூறும் இந்திய நடைமுறையை அமல்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். என்னை போல் வணக்கம் தெரிவியுங்கள். அல்லது கைகுலுக்காமல் ஏதேனும் ஒரு வழியை கண்டுபிடியுங்கள் என கூறினார்.
ஐரீஷ் நாட்டு பிரதமர் லியோ வராட்கரை வரவேற்கும்பொழுது, டிரம்பும் வணக்கம் தெரிவிக்கும் முறையை பின்பற்றினார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் லண்டனில் மக்களை சந்திக்கும்பொழுது வணக்கம் தெரிவித்த வீடியோ வைரலானது நினைவுகூரத்தக்கது.
இதேபோன்று ஜெர்மன் நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அவரை வரவேற்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய கலாசார முறையை பின்பற்றி வணக்கம் கூறினார். பதிலுக்கு மெர்கல்லும் வணக்கம் தெரிவித்து கொண்டார்.
அதிபர் மேக்ரானின் இல்லத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில், கொரோனா பாதிப்பு, பெலாரஸ் நாட்டில் தேர்தலுக்கு பின்னான அமைதியின்மை மற்றும் துருக்கி நாட்டுடனான பதற்ற நிலை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
17 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
17 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
17 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
17 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
17 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
17 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago