அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை - அதிபர் டிரம்ப்
Aug 24, 2020 254 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை - அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சையளிக்க அதிபர் டிரம்ப் அவசரகால அனுமதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,80,604 பேர் பலியாகியுள்ளனர். 57 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். எனவே, கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இம்முறையில் பிளாஸ்மாவை செலுத்தும் போது உடலில் நோயெதிர்ப்பு அணுக்கள் அதிகரித்து கொரோனா தொற்றை எதிர்த்து போரிட உதவி புரிகிறது.
ஆனால், கடந்த 22ம் தேதி, அரசியல் காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகளை வெளியிட அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு(எப்டிஏ) தடையாக இருப்பதாகவும், ஆனால், பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா உயிரிழப்புகள், 35 சதவீதம் குறைந்திருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சை வழங்க அதிபர் டிரம்ப் அவசர அனுமதி அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு(எப்டிஏ) அதிகாரிகள் வேண்டுமென்றே பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் செய்தார்கள்.
அரசியல் பின்னணியுடன் செயல்படுகிறார்கள், என்று குற்றம்சாட்டினார். ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள எப்டிஏ அதிகாரிகள், எப்டிஏ அதிகாரிகளையும், அமைப்பையும் தவறாக நினைத்து அவர்களை அதிபர் அவமானப்படுத்துகிறார். எப்டிஏ அமைப்பின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்.
பிளாஸ்மா சிகிச்சை உறுதியான சிகிச்சையாக இருக்கலாம். ஆனால், எந்த அளவுக்கு முழுமையானது எனத் தெரியாது. இதுவரை 70 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்,
ஏராளமானோர் குணமடைந்துள்ளார்கள். பலர் குணமடைந்து புதிய நோய்க்கு ஆட்பட்டுள்ளார்கள். ஆதலால், தீவிரமான ஆய்வு அவசியம், எனத் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago