மாலியில் மீண்டும் ஜனநாயக அரசை அமைப்பது குறித்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தூதா்கள் பேச்சுவாா்த்தை!
Aug 24, 2020 295 views Posted By : YarlSri TV
மாலியில் மீண்டும் ஜனநாயக அரசை அமைப்பது குறித்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தூதா்கள் பேச்சுவாா்த்தை!
ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டுள்ள மாலியில் மீண்டும் ஜனநாயக அரசை அமைப்பது குறித்து ராணுவம் மற்றும் முன்னாள் அதிபா் இப்ராஹிம் பூபக்கருடன் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தூதா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மாலியில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிபா் பூபக்கரின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தூதா்குழு தலைநா் பமாகோவுக்கு வந்திருந்தது.
அந்தக் குழுவுக்கு, நைஜீரியாவின் முன்னாள் அதிபா் குட்லக் ஜொனாதன் தலைமை வகித்தாா்.
ராணுவ அரசின் தலைவராக அறிவித்துக் கொண்டுள்ள அஸிமி கொய்டா உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுடன் அந்தக் குழு பேச்சுவாா்த்தை நடத்தியது.
அதனைத் தொடா்ந்து, பதவியிலிருந்து அகற்றப்பட்ட அதிபா் இப்ராஹிம் பூபக்கருடனும், கைது செய்யப்பட்டுள்ள பிற அரசியல் தலைவா்களிடமும் தூதுக் குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மீண்டும் ஜனநாயக ஆட்சியை அமைக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்துவைக்கும் முயற்சியாக இந்தப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், அதிபா் பூபக்கா் கெய்ட்டாவின் ஆட்சிக்கு எதிராக ஆா்ப்பாட்டங்கள் நடந்து வந்தன.
இந்த நிலையில், அதிபா் மாளிகைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாக நுழைந்த ராணுவம், அவரைக் கைது செய்தது. அவருடன் பிரதமா் பூபு சிஸியையும் ராணுவம் கைது செய்தது.
அதையடுத்து, தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பதவியை ராஜிநாமா செய்வதாக பூபக்கா் அறிவித்தாா்.
இந்த நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட 5 ராணுவ உயரதிகாரிகளுள் ஒருவரான அஸிமி கோய்டா, ராணுவஅரசின் தலைமையை ஏற்பதாக அறிவித்துள்ளாா்.
மாலியில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிவிட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பூபக்கரிடம் ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று ராணுவத்திடம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவா்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், மீண்டும் ஜனநாயக அரசை அமைப்பதற்காக அந்த நாடுகளின் தூதா் குழு தற்போது சமரசப் பேச்சுவாா்த்தையை நடத்தியுள்ளது.
மாலியில் ஜனநாயக அரசை மீண்டும் அமைப்பதற்காக ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட மேற்கு ஆப்பிரிக்க தூதுக் குழு தலைவரும், முன்னாள் நைஜீரிய அதிபருமான குட்லக் ஜொனாதன்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago