புதுச்சேரியில் இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
Aug 23, 2020 255 views Posted By : YarlSri TV
புதுச்சேரியில் இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
புதுச்சேரியில் இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அவசரத் தேவைக்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து வெளி மாநிலத்துக்குச் செல்வதற்கோ, வேறு மாநிலத்தில் இருந்து புதுச்சேரி வருவதற்கோ இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1461 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1461 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1461 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1461 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1461 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1461 Days ago