சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமித் ஷாவுக்கு மூச்சுத்திணறல்!
Aug 18, 2020 268 views Posted By : YarlSri TV
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமித் ஷாவுக்கு மூச்சுத்திணறல்!
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (55) கலந்துகொண்டார்.
அதன் பிறகு அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கடந்த 2ம் தேதி முதல் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 13ம் தேதி இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அவருக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன.
எனினும், வீட்டிலேயே சில நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அமித்ஷாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ‘நெகடிவ்’ என்று வந்துள்ளது.
எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி’ என்று பதிவிட்டார். இதற்கிடையே வீட்டில் இருந்த அமித் ஷா, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, தனது முகாம் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
இந்நிலையில் நேற்றிரவு டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ‘சிடி ஸ்கேன்’ செய்த போது, அவரது மார்பில் தொற்று மற்றும் சுவாச பிரச்னையால் மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, அவரது மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இன்று அதிகாலை 2 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா மேற்பார்வையிலான குழுவின் 24 மணி நேர கண்காணிப்பில் அமித் ஷா உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் சுவாச பிரச்னையால் அவதியுற்ற அமித் ஷா, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago