Skip to main content

ஹாங்காங்கில் நடந்த ஒரு கைது சம்பவமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற அந்நாட்டு மக்களின் வித்தியாசமான போராட்டமும்!

Aug 18, 2020 247 views Posted By : YarlSri TV
Image

ஹாங்காங்கில் நடந்த ஒரு கைது சம்பவமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற அந்நாட்டு மக்களின் வித்தியாசமான போராட்டமும்! 

ஹாங்காங் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றியது சீன அரசு.



‘சீனாவின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள ஹாங்காங்கில், அந்நாட்டு அரசுக்கு எதிரானவர்களை ஒடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப் பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.



இந்த நிலையில்,`நெக்ஸ்ட் டிஜிட்டல்’ நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் `ஆப்பிள் டெய்லி’ தினசரி பத்திரிகையின் தலைவரான 72 வயது ஜிம்மி லாய், ஆகஸ்ட் 10-ம் தேதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.



நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ஆப்பிள் டெய்லி அலுவலகத் துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை யிட்டதுடன், ஜிம்மி லாய் கையில் விலங்கு மாட்டி அழைத்துச் சென்றனர்.



ஜிம்மி லாயோடு சேர்ந்து மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் ஜிம்மி லாயின் மகன்கள்.



சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்துப் பேசியும், செய்திகள் வெளியிட்டும் வந்தவர் ஜிம்மி லாய்.



கடந்த ஆண்டு அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ், செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோரை ஜிம்மி லாய் சந்தித்துப் பேசியது சீன அரசுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி யிருந்தது. கடந்த ஆண்டில் சட்டவிரோதமாகப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக இரண்டு முறை கைது செய்யப்பட்டிருக்கிறார் ஜிம்மி லாய்.



`இந்த முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு பிபிசி ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியே காரணம்’ எனக் கூறப்படுகிறது. அந்த உரையாடலில், சீனாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை `சாவுமணி’ எனக் குறிப்பிட்டிருந்தார்.




இப்போது இந்த விவகாரம் சர்வதேச கவனம் பெற இரண்டு காரணங்கள். ஒன்று, ஊடகச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்.



மற்றொன்று, ஜிம்மி லாயின் கைதுக்கு ஹாங்காங் மக்கள் எதிர்வினை ஆற்றியவிதம். ‘ஜிம்மி லாயின் கைது, அந்த நிறுவனத்தின் பங்குகளை வெகுவாக பாதிக்கும்’ என நினைத்திருந்த நேரத்தில், கைதுக்குக் கண்டனம் தெரிவிக்கும்விதமாக, அந்நாட்டு மக்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர்.



இதனால், 0.255 ஹாங்காங் டாலர் என்ற அளவில் இருந்த ஒரு பங்கின் மதிப்பு, 24 மணி நேரத்தில் 1.10 ஹாங்காங் டாலராக அதிகரித்தது.



தொடர்ந்து 11-ம் தேதி அன்று அதிகாலை முதலே ‘ஆப்பிள் டெய்லி’ பத்திரிகையை வரிசையில் நின்று மக்கள் வாங்கிச் சென்றனர். சிலர் கட்டுக்கட்டாக வாங்கி மக்களுக்கு விநியோகம் செய்தனர்.



இதனால், ஒரே நாளில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகின. இது சராசரியைவிட ஐந்து மடங்கு அதிகம்.



அந்தப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் ஜிம்மி லாய் கைது புகைப்படத்துடன் இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது: `ஆப்பிள் டெய்லி தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும்!’



ஆம், ஹாங்காங் மக்களுடைய போராட்டத்தின் அடையாளமாகியிருக்கிறது ஒரு பத்திரிகை!



 



Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

15 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

15 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

15 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

15 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

15 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

15 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை