விநாயகர் சதுர்த்தி விதிமுறைகளை மீறாமல் இருக்க அனைத்து நடவடிக்கை - மகேஷ் குமார் அகர்வால்
Aug 21, 2020 269 views Posted By : YarlSri TV
விநாயகர் சதுர்த்தி விதிமுறைகளை மீறாமல் இருக்க அனைத்து நடவடிக்கை - மகேஷ் குமார் அகர்வால்
சென்னையில் கொரோனா பணிகளில் ஈடுபட்டு நோயினால் பாதிக்கப்பட்ட காவலர்களை போற்றும் விதமாக அவர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பமான கல்லூரி சேர்க்கை சான்றிதழை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார். மேலும் 2018ம் ஆண்டில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த காவலர்களின் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசை வழங்கினார்.
சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புப் பணியில் பணி செய்துவரும் காவலர்கள், மருத்துவர்கள், மாநகராட்சி போன்ற துறைகளில் பணியாற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக 300 கல்லூரிச் சேர்க்கை சான்றிதழை வழங்கியுள்ளதாகவும் இதற்கு செலவாகும் 12 கோடி தொகையை தாங்களே ஏற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து அரசு மற்றும் உயர் நீதிமன்றம் வழிமுறைகள் வகுத்துள்ளது. எனவே பொது மக்கள் அதைப் பின்பற்ற வேண்டும். இந்து அமைப்புகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் ஊர்வலம் நடத்த மாட்டோம் என தெரிவித்து சென்றுள்ளனர்.
சில அமைப்புகள் தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம் என தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பிய போது, விநாயகர் சதுர்த்தி விதிமுறைகளை மீறாமல் இருக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவார்கள் என்றார்.
மேலும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு 2,054 காவலர்கள் இதுவரை கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்யும் வகையில் 12ம் வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு, தற்போது 52 பேருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், 250 குழந்தைகளுக்கு இலவச சேர்க்கை சான்றிதழ் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
20 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
20 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
20 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago