Skip to main content

செஞ்சோலை படுகொலையின் 14 ம் ஆண்டுநினைவு நாள் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது!

Aug 14, 2020 265 views Posted By : YarlSri TV
Image

செஞ்சோலை படுகொலையின் 14 ம் ஆண்டுநினைவு நாள் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது! 

2006 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில்  செஞ்சோலை கிராமத்தில் விமான குண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட54 பாடசாலை மாணவர்கள் உட்பட 61  சிறுவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல்  இன்றைய தினம் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது



உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் நினைவாக  தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுஅக வணக்கம் செலுத்தப்பட்டதோடு



 மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது



குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன்  கஜேந்திரகுமார்பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை