றகீபுக்கு எதிராக உத்தியோகத்தர்கள் போராட்டம்!
Aug 13, 2020 253 views Posted By : YarlSri TV
றகீபுக்கு எதிராக உத்தியோகத்தர்கள் போராட்டம்!
கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம் ஒன்றினை இன்று(13) முன்னெடுத்துள்ளனர்.
கல்முனை மாநகர முதல்வரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலகமாக கல்முனை பொலிஸ் நிலையம் வரை சென்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்க முற்பட்டனர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி ஊர்வலமாக சென்ற உத்தியோகத்தர்கள் குழு பொறுப்பதிகாரியை சந்தித்த பின்னர் அமைதியாக ஊர்வலத்தை நிறைவு செய்து திரும்பி சென்றனர்.
மேலும் கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் காணப்படுவதுடன் ஒரே நுழைவாயில் ஊடாக உத்தியோகத்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வளாகத்தில் நின்ற ஒரு பாரிய மரத்தினை வெட்டியமைக்காக பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அநாகரீக வார்த்தைகளால் திட்டியதாக மாநகர சபை முதல்வர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1466 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1466 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1466 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1466 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1467 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1467 Days ago