இவ்வருடம் யாழ் மாநகர சபைக்கு அதிக நிதி நெருக்கடிநிலைமை காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன்தெரிவித்தார்!
Aug 17, 2020 257 views Posted By : YarlSri TV
இவ்வருடம் யாழ் மாநகர சபைக்கு அதிக நிதி நெருக்கடிநிலைமை காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன்தெரிவித்தார்!
இவ்வருடம் யாழ் மாநகர சபைக்கு அதிக நிதி நெருக்கடிநிலைமை காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன்தெரிவித்தார்
யாழ்ப்பாண மாநகரசபை2020 ம் ஆண்டு மிக அதிக நிதி நெருக்கடியை சந்திக்க கூடிய ஆண்டாக காணப்படுகின்றது
கொரோனா சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான சுமார் 349 கடைகளுக்கான இரண்டு மாத வாடகை சலுகையினைசபை அனுமதியோடு விலக்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது
இம்முறை நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவ காலத்தில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இதன்காரணமாக மாநகர சபைக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது நல்லூர் ஆலய உற்சவத்தின் போது யாழ்ப்பாண மாநகர சபைக்கு வருடாந்தம் 1கோடி 50 லட்சம் வருமானம் கிடைக்கின்ற போதும் சபை ரீதியான செயற்பாடுகளுக்காக சுமார் 70 லட்சம் செலவு செய்யப்படுவது வழமை
எனினும் இந்த முறை நல்லூர் உற்சவ காலத்தில் அனைத்து செலவுகளையும் சபையே பொறுப்பேற்க வேண்டிய நிலை காணப்படுகின்றது
ஏனைய துறைகளை எடுத்துக்கொண்டால் சந்தை வருமானம் போன்ற ஏனைய வருமானங்களும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக குறைந்தளவாகவே சபைக்கு கிடைத்துள்ளது
இவ்வாண்டு பெரும் நிதிநெருக்கடியினை எமது மாநகரசபைக்கு ஏற்படுத்தியுள்ளது இதன் தாக்கம் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் தான் வெளிப்படும்
இது தொடர்பில் மாநகர சபை முதல்வர் ஏனைய தரப்பினருடனும் ஆராய்ந்து ஒரு நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கவுள்ளோம் அத்தோடு மேலதிகமாக ஏதாவது நிதி மூலங்களைதேடுவதா அல்லது நிலையான சேமிப்பில் இருக்கிற பணத்தை எடுத்து செலவழிப்பதா எவ்வாறு இந்த நெருக்கடியை சமாளிப்பது தொடர்பில் நாம் விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வுள்ளோம் என்றார்...
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago