உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
Aug 17, 2020 380 views Posted By : YarlSri TV
உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே முதன் முதலில் உயிர் பலியை ஏற்படுத்தியது பிலிப்பைன்சில்தான். அந்த நாட்டில் இன்னமும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது.
அங்கு புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 918 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 2,600 கடந்துள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு உள்துறை மந்திரியாக இருந்து வரும் எட்வர்டோ அனோவுக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். ஒரு மாதத்தில் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பூரண குணமடைந்தார்.
அதன் பின்னர் அவர் தனது பணிக்கு திரும்பி அரசு வேலைகளை கவனித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரிடம் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில், 2-வது முறையாக அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
22 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
22 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
22 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
22 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
22 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
22 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago