இந்தியர்கள் ஆதரவு யாருக்கு...? டிரம்ப் - பிடன் இடையே கடும் போட்டி!
Aug 17, 2020 269 views Posted By : YarlSri TV
இந்தியர்கள் ஆதரவு யாருக்கு...? டிரம்ப் - பிடன் இடையே கடும் போட்டி!
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கான வேட்பாளராக குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிபர் பதவிக்கான தேர்தலில் இந்தியர்களின் வாக்கு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் கமலா ஹாரீஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், கமலாவை விட ந்தியர்களின் ஆதரவு தமக்கே அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒருவேளை ஜோ பிடன் அதிபரானால், காவல்துறைக்கு நெருக்கடி தரும் சட்டங்களை இயற்றுவார் என குற்றம்சாட்டியுள்ள டிரம்ப், பிடனின் அமெரிக்காவில் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது என்றும் கூறியுள்ளார். கமலாவின் குடியுரிமை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்காவில் பிறக்காத ஒருவர் தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என தெரிவித்தார். டிரம்பின் இந்த கருத்து கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் பிறக்காதவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்ற டிரம்பின் கருத்துக்கு அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசியல் சட்டத்தின்படி கமலா அமெரிக்க குடிமகள் என்றும், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தை முன்வைத்து இனவெறியைத் தூண்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்படுவது ஆபத்தானது என கமலா ஹாரீஸ் எச்சரித்துள்ளார். இந்த தேர்தல் டிரம்பை தோற்கடிப்பதற்கானது மட்டுமின்றி, சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு ஆனதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago