ஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!
Jul 09, 2020 297 views Posted By : YarlSri TV
ஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று!
இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், 21,129 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 24,879 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,67,296 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், 21,129 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 62.08 ஆக உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா (30,54,695), பிரேசிலை (17,13,160) தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா (6,603), தமிழகம் (3,756), கர்நாடகா (2,062), டெல்லி (2,033) தெலுங்கானா (1,924) உள்ளிட்ட மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன.
2.23 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்பு எண்ணிக்கையை கொண்ட மகாராஷ்டிரா நாட்டிலே பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள முதல் மாநிலமாக உள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டிலே அதிக உயிரிழப்பை (198) கொண்ட மாநிலமாகவும் உள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் (64), கர்நாடகாவில் (54), டெல்லியில் (48), மேற்குவங்கத்தில் (23) என்ற அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 6 லட்சத்தை எட்டிய நான்கு நாட்களில் இந்த வாரத்தில் 7 லட்சத்தை எட்டியது. அதேபோல், முதல்முறையாக ஒரே நாளில் அதிகபட்சமாக 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago