Skip to main content

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்!

Aug 13, 2020 312 views Posted By : YarlSri TV
Image

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்! 

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.



இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் நடைபெற்ற 9 ஆவது நாடாளுன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பொதுஜன பெருமுன, ஈ.பி.டி.பி போன்ற பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்துள்ளது.



அதனடிப்படையில், நேற்று(12) தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்பு நிகழ்வில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கி வைத்தார்.இந்நிலையில், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை