Skip to main content

மெல்ல மெல்ல கொரோனா குறைந்துவரும் நிலையில் 4 மண்டலங்களில் பரிசோதனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது!

Aug 12, 2020 277 views Posted By : YarlSri TV
Image

மெல்ல மெல்ல கொரோனா குறைந்துவரும் நிலையில் 4 மண்டலங்களில் பரிசோதனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது! 

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது சென்னையில் மட்டும் 1,10,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,327 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 96,466 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.



இதன்படி திருவொற்றியூரில் 3,468 பேர், மணலியில் 1,696 பேர், மாதவரத்தில் 3,178 பேர், தண்டையார்பேட்டையில் 9,218 பேர், ராயபுரத்தில் 10,871 பேர், திருவிக நகரில் 7,748 பேர், அம்பத்தூரில் 5,410 பேர், அண்ணா நகரில் 11,092 பேர், தேனாம்பேட்டையில் 10,447 பேர், கோடம்பாக்கத்தில் 11,136 பேர், வளசரவாக்கத்தில் 5,407 பேர், ஆலந்தூரில் 3,113 பேர், அடையாற்றில் 6,983 பேர், பெருங்குடியில் 2,814 பேர், சோழிங்கநல்லூரில் 2,307 பேர் குணமடைந்து உள்ளனர்.



11,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருவொற்றியூரில் 384 பேர், மணலியில் 103 பேர், மாதவரத்தில் 519 பேர், தண்டையார்பேட்டையில் 664 பேர், ராயபுரத்தில் 821 பேர், திருவிக நகரில் 737 பேர், அம்பத்தூரில் 1,619 பேர், அண்ணா நகரில் 1,214 பேர், தேனாம்பேட்டையில் 713 பேர், கோடம்பாக்கத்தில் 1,433 பேர், வளசரவாக்கத்தில் 781 பேர், ஆலந்தூரில் 548 பேர், அடையாற்றில் 839 பேர், பெருங்குடியில் 485 பேர், சோழிங்கநல்லூரில் 454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை