கொரோனாவில் இருந்து மேலும் 10,014 பேர் மீட்பு!
Aug 11, 2020 288 views Posted By : YarlSri TV
கொரோனாவில் இருந்து மேலும் 10,014 பேர் மீட்பு!
மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,014 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா., முன்னிலையில் உள்ளது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. மாநிலத்தில் இன்று புதிதாக 11,088 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரதுறைதெரிவித்துள்ளது. மஹா.,வில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5,35,601 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் கொரோனா பலி 18,000 ஐ கடந்து சென்றது. புதிதாக நோய் தொற்றால் 256 பேர் பலியாகியுள்ளனர். மஹாராஷ்டிராவில் நோய் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 18,306 ஆக உயர்ந்தது.மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 10,014 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,68,435 ஆக உயர்ந்தது. மஹா.,வில் தற்போது 1,48,553 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் நோய் பாதிப்பு 5 லட்சத்தை தாண்டி செல்கிறது.
மும்பையை பொறுத்தவரை நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 917 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். மும்பையின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,25,224 ஆக உள்ளது. மேலும் 48 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மும்பையில் இதுவரை 6,893 பேர் நோயால் பலியாகியுள்ளனர். தற்போது மும்பையில் 18,887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.புனேவில் 928 பேர் பாதிக்கப்பட்டனர். 36 பேர் பலியாகினர். புனே நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 72,640 பேராகவும், பலியானவர்கள் 1,862 பேராகவும் உள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago