Skip to main content

மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே யுத்தத்தை வெற்றி கொண்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.....!

Jun 09, 2020 352 views Posted By : YarlSri TV
Image

மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே யுத்தத்தை வெற்றி கொண்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.....! 

நாட்டு மக்கள் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே யுத்தத்தை வெற்றி கொண்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



தனது அரசியல் வாழ்க்கை ஐம்பது வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்று அரச தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் இதனை தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



2005 ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.



அதனை செவிமடுத்து தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்து யுத்தத்தை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்தேன்.



சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்த போதிலும் யுத்தத்திற்கு முடிவு கட்டி சகல இன மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை