யாழில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா....!
Jun 09, 2020 298 views Posted By : YarlSri TV
யாழில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா....!
யாழ்ப்பாணம் இணுவிலில் இருந்து நாடு திரும்பிய இந்திய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாளை இணுவில் கிராமத்தினை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
அண்மையில் இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு கப்பல் மூலம் தமது நாட்டிற்கு அழைத்திருந்தது.
அவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக இன்று மாலை தகவல்கள்வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த நபருக்கான தொற்றுத் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்கு சுகாதாரத் திணைக்களம் இந்தியத் தூதரகத்தின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
இதேவேளை அவர் தங்கியிருந்ததாக கூறப்படும் இணுவில் கிராமத்தினையோ அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளையோ தனிமைப்படுத்துவதற்கான முனைப்புக்கள் இடம்பெற்றுவருவதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தனிமைப்படுத்தல் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1461 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1461 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1461 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1461 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1462 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1462 Days ago