தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை
Jun 14, 2020 311 views Posted By : YarlSri TV
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை
2018ம் ஆண்டு வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் தற்கொலைக்கு காரணம் இன்னும் வெளியாகவில்லை. ரியா கபூரை இவர் காதலித்து வந்ததாக வதந்திகள் உள்ளன.மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள இல்லத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த நிலையில் இருப்பது குறித்த தகவலை அவரது வீட்டு பணிப்பெண் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்தியில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார். நடிகரின் தற்கொலை செய்தி இந்தியத் திரையுலகினர் மத்தியில்,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திறமை வாய்ந்த இந்த நடிகரின் மறைவுக்கு பலதரப்புகளிலிருந்தும் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.
டிவி நடிகராக புகழ்பெற்று வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2013ம் ஆண்டு அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியான கை போச்சே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பி.கே, ராப்டா, கேதார்நாத், சோன்சிரியா, ட்ரைவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியாக நடித்து உலகளவில் பிரபலமானார். சில நாட்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் பெண் மேலாளரான திஷா சேலியன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த திங்களன்று தனது அப்பார்ட்மென்ட் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் பாலிவுட்டில் பூதாகரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago