Skip to main content

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jun 12, 2020 266 views Posted By : YarlSri TV
Image

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த போட்டிக்கான தேதி இறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டித் தொடர் இப்போதைக்கு ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறுகையில், 'இந்திய கிரிக்கெட் அணி இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை. சர்வதேச பயண கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்பது தெரியவில்லை. எனவே ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த போட்டி தொடரில் இந்திய அணி பங்கேற்க சாத்தியமில்லை என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டோம். பின்னர் வரும் நாட்களில் இந்த போட்டி தொடரில் விளையாடுவதாக உறுதி அளித்துள்ளோம்' என்றார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகஸ்டு மாதத்தில் இந்த தொடரை நடத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை