தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது
Jun 12, 2020 278 views Posted By : YarlSri TV
தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது
தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் சென்னையில் ஊரடங்கை 100% தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் பல தளர்வுகளுடன் 5ஆம் கட்ட ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை.குறிப்பாக, தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், 70 சதவீத பாதிப்பு சென்னையில் மட்டுமே உள்ளது. இதனால், சென்னையில் மட்டும் ஊரடங்கை தீவிரப்படுத்த உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்ற வழக்குகளுக்காக ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம்,சென்னை கொரோனா நிலவரம் குறித்து நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு கேள்வி எழுப்பியது.சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா எனவும், அல்லது தற்போது உள்ள நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக வழக்கறிஞர் கூறியதால், வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனால் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறுகையில்,' சென்னையில் ஊரடங்கை 100% தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் இருந்து வெளிமாவட்டம் செல்வோருக்கு இ - பாஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி, தமிழகத்தில் இ - பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்படவில்லை.நிபுணர் குழுவின் அறிவுரைகளின்படி அவ்வப்போது அரசு முடிவு எடுத்து வருகிறோம்.' என்று கூறினர். அரசின் விளக்கத்தை அடுத்து, ஊரடங்கை தீவிரப்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1461 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1461 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1461 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1461 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1461 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1461 Days ago