Skip to main content

2 கோடிக்கு மேல் சிறுவன் நிதி திரட்டி கொடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jun 11, 2020 258 views Posted By : YarlSri TV
Image

2 கோடிக்கு மேல் சிறுவன் நிதி திரட்டி கொடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டோனி ஹெட்கெல் என்ற சிறுவன் குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் ஏற்படுத்திய காயத்தால் டோனியின் இரண்டு கால்களையும் அகற்ற நேர்ந்தது.தற்போது தனது வளர்ப்பு பெற்றொருடன் வசித்து வரும் டோனி, இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற கேப்டன் டாம் மூர், சமீபத்தில் கொரோனா களத்தில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்காக தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் குறித்து அறிந்தார்.தானும் அதே போல் நிதி திரட்டி, சிறு வயதில் தன் உயிரைக் காப்பாற்றியப் லண்டன் எவெலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு டோனி வழங்க முடிவெடுத்தார்.தற்போது செயற்கைக் கால்களின் உதவியுடன் நடமாடும் டோனி ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோமீட்டர் நடந்து 500 யூரோக்கள் அதாவது 42,800 ரூபாய் திரட்டத் திட்டமிட்டார். ஆனால் ஆச்சரியமூட்டும் விதமாக டோனியின் அறக்கட்டளைக்கு இதுவரை 2.74 கோடி ரூபாய் நன்கொடை சேர்ந்துள்ளது.

 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை