Skip to main content

ஆப்பிரிக்க நாட்டு புருண்டி அதிபருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்

Jun 11, 2020 321 views Posted By : YarlSri TV
Image

ஆப்பிரிக்க நாட்டு புருண்டி அதிபருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்  

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புருண்டி. இதன் அதிபராக இருந்து வந்தவர் பியர் நகுருன்சிசா (வயது 55). கடந்த 6-ந் தேதி இரவில் இவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்ப்டது.அதைத் தொடர்ந்து கருசி மாகாணத்தில் உள்ள நாட்வே துராஷோபாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் அவரது உடல்நிலை தேறி வந்தது. அவர் தனக்கு அருகில் இருந்தவர்களுடன் பேசி இருக்கிறார். ஆனால் 8-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு புருண்டி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 9-ந் தேதி முதல் ஒரு வார கால அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் அங்கு அதிபராக இருந்து வந்தார்.கடந்த 20-ந் தேதி நடந்த தேர்தலில் புதிய அதிபராக எவரிஸ்ட் நதைஷிமியே தேர்ந்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் பியர் நகுருன்சிசா போட்டியிட வில்லை. வரும் ஆகஸ்டு மாதம் பதவி நிறைவு பெற இருந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.மரணம் அடைந்த அதிபருக்கு டெனிஸ் என்ற மனைவியும், 5 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் நிறைய குழந்தைகளை தத்தும் எடுத்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை