Skip to main content

சீனாவில் கனமழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

Jun 11, 2020 263 views Posted By : YarlSri TV
Image

சீனாவில் கனமழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 

சீனாவின் யுகான், சுற்றுலாத்தலமான யாங்ஸ்யு உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 2-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 8 மாகாணங்களில் உள்ள 110 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்புள்ள பயிர்கள் நாசமானதோடு, 2,800 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தென்மேற்கு மாகாணத்தில் 8 பேர் உள்பட மொத்தம் 20 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு வீரர்களோடு போலீசாரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். யாங்ஸ்பு மாகாணத்தில் ஆயிரம் ஓட்டல்கள், 5 ஆயிரம் கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுற்றுலா பயணிகளும், கிராம மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழை வெள்ளத்தால் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகி உள்ளன. பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை