Skip to main content

இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் வீடுகளுக்கு..!

Jun 10, 2020 374 views Posted By : YarlSri TV
Image

இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் வீடுகளுக்கு..! 

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் இதுவரை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினமும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 61 பேர் வீடுகளுக்கு திரும்பவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முப்படையினரால் 42 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் முன்னெடுத்து செல்லப்படுகின்றன.



குறித்த மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து 118 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களே இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இன்றைய தினம் வெளிநாடுகளிலிருந்து எந்தவொரு இலங்கையரையும் அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எதிர்வரும் இரு தினங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை