கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக போராடுவதை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்து......!
Jun 05, 2020 233 views Posted By : YarlSri TV
கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக போராடுவதை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்து......!
கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுப்படுவதை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஷன் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் வார இறுதியில் அவுஸ்திரேலியாவில் பெரும் நகரங்களில் எதிர்ப்பு பேரணிகளை நடத்த மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் மூலம் நடைவடிக்கை எடுக்கவும் அவுஸ்திரேலியா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சில நகரங்களில் ஆயிரத்துக்கு அதிகமானோர் நாளை மற்றும் நாளை மறு தினம் ஆர்ப்பாட்டங்களை நடத்த எதிர்பார்த்துள்ளனர். அமெரிக்காவில் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்டின் மரணத்திற்கு நீதி கோரி பல நாடுகளிள் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவுஸ்திரேலியாவிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் ஊரடங்கு அமுலில் உள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுமாயின் அது நோய் பரவலை தடுப்பதற்கு பாதிப்பாக அமையுமென அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago