தனுசுடன் நடிக்க போலியாக நடிகர்கள் தேர்வை நடத்தி பண மோசடி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு
Jun 05, 2020 262 views Posted By : YarlSri TV
தனுசுடன் நடிக்க போலியாக நடிகர்கள் தேர்வை நடத்தி பண மோசடி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு
தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வந்தன. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடிக்கிறார். ஜகமே தந்திரம் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. ஒரு இந்தி படமும் கைவசம் வைத்துள்ளார். அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கார்த்திக் நரேன் ஏற்கனவே துருவங்கள் பதினாறு, மாபியா ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர். கொரோனா ஊரடங்கு முடிந்தும் தனுஷ் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இது தனுசுக்கு 43-வது படம் ஆகும். இந்த படத்தில் தனுசுடன் நடிக்க போலியாக நடிகர்கள் தேர்வை நடத்தி பண மோசடி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.இதுகுறித்து கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-எனது பெயரை பயன்படுத்தி ஒரு வாட்ஸ் அப் நம்பரின் முலம் போலியான நடிகர் தேர்வை ஒரு நபர் நடத்தி வருவதாகவும் அவர்களிடம் இருந்து எனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக சொல்லி பணம் வசூல் செய்வதாகவும் கவனத்துக்கு வந்துள்ளது. அவரிடம் யாரும் ஏமாற வேண்டாம். அவர் மீது புகார் செய்யுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago