தூக்கு காவடி எடுத்தவரை வழிமறித்து திருப்பி அனுப்பிய பொலிஸார்......!
Jun 08, 2020 353 views Posted By : YarlSri TV
தூக்கு காவடி எடுத்தவரை வழிமறித்து திருப்பி அனுப்பிய பொலிஸார்......!
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில், நேர்த்திக்கடன் செய்யும் பொருட்டு வந்த தூக்குக்காவடியை பொலிஸார் வழிமறித்து திருப்பிய அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் குவிக்கப்பட்டு நேற்று பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.
முள்ளியவளை மகா விஷ்ணு ஆலயத்தில் இருந்து காட்டு விநாயகர் ஆலயத்திற்கு நேர்த்திக்கடனாக தூக்கு காவடி எடுத்து வந்துள்ளார்கள்.
இதன்போது இவர்களை வழிமறித்த பொலிஸார் தூக்கு காவடியில் தொங்கியவரை இறக்கி, அவரது முதுகில் குத்தப்பட்டு இருந்த செடில்களை கழற்றிவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள்.
காலம் காலமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும், முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கும் எந்த தடைகள் வந்தாலும் நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்கள் இம்முறை மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago