கொரோனா ஊரடங்கில் தணிக்கையான முதல் தமிழ் படம். சூரரை போற்று
Jun 08, 2020 329 views Posted By : YarlSri TV
கொரோனா ஊரடங்கில் தணிக்கையான முதல் தமிழ் படம். சூரரை போற்று
சூர்யாவின் ‘சூரரை போற்று‘ படபிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கினால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. படத்தின் டிரெய்லர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.பின்னர் சென்னை விமான நிலையத்தில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தினர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் சூரரை போற்று படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். தணிக்கையில் படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்து இருப்பதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.கொரோனா ஊரடங்கில் தணிக்கையான முதல் தமிழ் படம் இதுவாகும். சூரரை போற்று படம் ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கி உள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை இணைய தளத்தில் வெளியிட்டதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யா படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் அறிவித்து உள்ளனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
மராட்டியத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகம் எடுத்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை!
-
பருவமழையின்போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி!
-
ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு. சைப்ரஸ் நாட்டில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago