Skip to main content

கொழும்பில் கோரவிபத்து.....!

Jun 07, 2020 263 views Posted By : YarlSri TV
Image

கொழும்பில் கோரவிபத்து.....! 

பசறை நகரின் மத்தியில் இன்று (7) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். மூவர் படுகாயமடைந்தனர்.



நகர மத்தியிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டிகளை லொறியொன்று மோதித்தள்ளியது. காலை 9மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்துக்குள்ளாகிய நான்கு முச்சக்கர வண்டிகளில் ஒரு முச்சக்கர வண்டி பள்ளத்தில் வீசப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லொரி வீதியில் தடம்புரண்டது.



காயங்களுக்குள்ளான மூவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் மருத்துவ மனையிலும் , ஏனைய இருவரும் பசறை அரசினர் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றி வந்த லொறி, நேற்றிரவு தரித்து நின்று விட்டு இன்று காலை பயணத்தை தொடர்ந்த போது விபத்திற்குள்ளாகியுள்ளது.



பசறை பொலிசார் மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை