Skip to main content

இங்கிலாந்தில் சிக்கித்தவித்த 278 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்....!

Jun 07, 2020 259 views Posted By : YarlSri TV
Image

இங்கிலாந்தில் சிக்கித்தவித்த 278 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்....! 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 278 இலங்கையர்களுடன் விசேட விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இதன் அடுத்தகட்டமாக இங்கிலாந்தில் சிக்கித்தவித்த 278 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.



ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான, விசேட விமானம் மூலம் குறித்த 278 பேரும் இங்கிலாந்திலிருந்து அழைத்துவரைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை