Skip to main content

ஜோர்ஜ் ஃப்ளாய்ட் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மனம் வருந்தல்....!

Jun 07, 2020 267 views Posted By : YarlSri TV
Image

ஜோர்ஜ் ஃப்ளாய்ட் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மனம் வருந்தல்....!  

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் நான் ஆட்சியில் தொடர வேண்டியது அவசியம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.



அமெரிக்க பொருளாதாரம் குறித்தும் ஜோர்ஜ் ஃப்ளாய்ட் மரணம் குறித்தும் ட்ரம்ப் கூறும்போது,



''அமெரிக்காவின் சரிந்த பொருளாதாரம் இன்று மீண்டுள்ளது. வேலை வாய்ப்புகள் வேகமாக அதிகரித்துள்ளன. அமெரிக்க வரலாற்றில் இது சிறந்த சாதனை.



நான் அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகள் இந்தப் பதவியில் தொடர வேண்டும். ஒருவேளை தவறான நபர்கள் அப்பதவிக்கு வராதபட்சத்தில் வளர்ச்சி மீண்டும் தொடரும்.



கடந்த வாரம் நடந்த நிகழ்வைக் கண்டிக்கிறேன். வேறு எந்த அதிபரும் கருப்பின மக்களுக்கு என்னைப் போல் உதவவில்லை.



நான் மேற்கொண்ட பொருளாதார மீளுருவாக்கம் சமூக உறவை மேம்படுத்தி சமத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திலும் அமெரிக்கா நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது. தற்போது ஜோர்ஜ் ஃப்ளாய்ட் மேலே இருந்து நம்மைப் பார்த்து ‘நம் நாட்டில் சிறப்பான விஷயங்கள் நடந்து வருகின்றன. இது நிச்சயம் சமத்துவத்துக்கான நிகழ்வு என்று கூறுவார்'' எனத் தெரிவித்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை