Skip to main content

சீரியஸ் என்ஜின்களை பொருத்த மேலும் 3 மாதம் அவகாசம் - டிஜிசிஏ

Jun 01, 2020 402 views Posted By : YarlSri TV
Image

சீரியஸ் என்ஜின்களை பொருத்த மேலும் 3 மாதம் அவகாசம் - டிஜிசிஏ 

சிவில் விமான போக்குவரத்து இயக்குனநகரம் (டிஜிசிஏ) கடந்த ஆண்டு இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்கள் தங்களது ஏ 320 நியோ விமானங்களில் உள்ள பழைய என்ஜின்களை மாற்றும்படி உத்தரவிட்டிருந்தது.



விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின்களில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால், அவற்றை அகற்றிவிட்டு புதிய சீரியஸ் என்ஜின்களை பொருத்தும்படி சிவில் விமான போக்குவரத்து இயக்குனநகரம் அறிவுறுத்தியிருந்தது.



முதலில் ஜனவரி 31ம் தேதிக்குள் மாற்றும்படி உத்தரவிடப்பட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக மே மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பழைய என்ஜின்களை மாற்றுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 3 மாதம் அவகாசம் அளித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.



டிஜிசிஏ உத்தரவின்படி ஏற்கனவே பெரும்பாலான விமானங்களின் என்ஜின்கள் மாற்றப்பட்ட நிலையில், இன்னும் 60 என்ஜின்கள் மட்டுமே மாற்றவேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை