கொரானாவுக்கு முடிவுகட்டுவதாக கூறி 52 வயது நபரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி...!
May 29, 2020 315 views Posted By : YarlSri TV
கொரானாவுக்கு முடிவுகட்டுவதாக கூறி 52 வயது நபரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி...!
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கேட்டதாக கூறி, ஒருவரை கோவிலில் தலையை வெட்டி கொன்ற பூசாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கின் அமைந்துள்ள பிராமணி தேவி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா (72).இவர் இரண்டு நாட்களுக்கு முன் 52 வயது நபரை கோவில் சன்னதிக்குள் அழைத்து வந்து கடவுள் முன்னிலையில் அவரின் தலையை துண்டாக வெட்டி பலி கொடுத்துள்ளார்.
பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். அப்போது போலீசாரிடம் சன்சாரி கூறுகையில், என் கனவில் பிராமணி தேவி அம்மன் வந்து நரபலி கேட்டார். அப்படி செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரும் என கூறினார். கடவுளே சொன்னதால் தான் இப்படி செய்தேன் என கூறி உள்ளார்.
கைது செய்யப்பட்ட சன்சாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கிராமத்தின் சுற்றளவில் ஒரு மா பழத்தோட்டம் தொடர்பாக இறந்தவருடன் சாமியார் நீண்டகாலமாக தகராறு செய்ததாக பந்தஹுதா கிராமத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அவரை கொன்றுவிட்டு, நாடகம் ஆடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
போலீஸ் டி.ஐ.ஜி மத்திய ரேஞ்ச் ஆஷிஷ்குமார் சிங் கூறியதாவது:-
சம்பவம் நடந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறுநாள் காலையில் அவர் மீண்டும் நினைவுக்கு வந்தபோது அவர் சரணடைந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டார் என கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago