யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!
May 29, 2020 362 views Posted By : YarlSri TV
யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!
யாழ்ப்பாணம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 300 பேர் வரையில் விடத்தற்பளை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாதிரிகள் கடந்த 25ஆம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அவை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.
பரிசோதனை முடிவுகள் நேற்றுமுன்தினம் மாலை கிடைக்கப்பெற்றன. அதில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நேற்றுக் காலை சிகிச்சைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலை மற்றும் கடற்படை பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago