Skip to main content

இந்தியாவின் விளை நிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள்; இலங்கையையும் தாக்கும் சாத்தியம்....!

May 28, 2020 310 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவின் விளை நிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள்; இலங்கையையும் தாக்கும் சாத்தியம்....!  

இந்தியாவின் பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவிலுள்ள வயல்களில் பயிர்களை அழிக்கத் தொடங்கியுள்ளன.



இதுகுறித்து மத்திய வேளாண்மைத் துறை அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில்,



ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் சூழ்ந்துள்ளது.



கடந்த 27 ஆண்டுகளில் இவ்வருடமே வெட்டுக்கிளிகள் மிக மோசமான தாக்குதலை நடத்துகிறது.



விளைநிலங்களை சூழ்ந்திருக்கும் வெட்டுக்கிளிகளை ட்ரோன்கள் மூலம் மருந்து தெளித்தும், தீயணைப்பு மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பூச்சி மருந்து தெளித்தும் அழித்து வருகின்றனர்.



இதேவேளை மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் வெட்டுக்கிளிகளை விரட்டும் முயற்சியில் பாத்திரங்களை அடித்து வருகின்றனர்.



5 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டத்தை அழிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.



பூச்சி கொல்லி தெளிக்கும் 89 தீயணைப்பு வாகனங்களும், 120 ஆய்வு வாகனங்களும், தெளிப்பான்கள் கொண்ட 47 கட்டுப்பாட்டு வாகனங்களும், தெளிப்பான்கள் பொருத்தப்பட்ட 810 டிராக்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.



ராஜஸ்தானின் 8 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 7 மாவட்டங்களிலும் வெட்டுக்கிளிக் கூட்டங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால் விதர்ப்பா பகுதியில் 11 மாவட்டங்களுக்கும், வடக்கு மகாராஷ்டிரத்தில் 4 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஒடிசா மாநிலத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் வாய்ப்புள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணெய், வேப்பமருந்துக் கரைசலைத் தெளிக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.



இந்த நிலையில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து அதற்கேற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என வடமாநில விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இதுவொருபுறமிருக்க, வெட்டிக்கிளிகளின் அபாயம் ஸ்ரீலங்காவிலும் தாக்கத்தினை செலுத்துவதற்கான அதிகளவான வாய்ப்புக்கள் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.



குறிப்பாக, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பரவிவரும் இதன் தாக்கம், தமிழகத்தின் கரையோர மாவட்டங்களான இராநாதபுரம் வழியாக, இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



இதுபோன்ற நிகழ்வுகள் வழமை என்றாலும், கொண்டல் காற்றினூடாக இதன் பரவல் அதிகளவில் ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை