புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
May 31, 2020 550 views Posted By : YarlSri TV
புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி பிராண்டு தனது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலான ரியல்மி பட்ஸ் கியூவினை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. பின் இந்தியாவில் பட்ஸ் ஏர் நியோ எனும் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.தற்சமயம் ரியல்மி இந்தியா நிறுவனத்தின் ஃபிரான்சிஸ் வேங் பட்ஸ் கியூ இயர்பட்ஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என்றும் இதன் விலை ரூ. 2 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சீன சந்தையில் ரியல்மி பட்ஸ் கியூ விலை இந்திய மதிப்பில் ரூ. 1580 என நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஃபிரெஞ்சு வடிவமைப்பாளரான ஜோஸ் லெவி புதிய ரியல்மி பட்ஸ் கியூ இயர்பட்சை வடிவமைத்தார். ரியல்மி பட்ஸ் கியூ இயர்பட்ஸ் அதிக மென்மையாகவும், பயனரின் உள்ளங்கை மற்றும் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையிலும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.இத்துடன் 10 மில்லிமீட்டர் பாஸ் பூஸ்டர் டிரைவர்கள், டிபிபி டைனமிக் பாஸ் உள்ளிட்ட அம்சங்கள் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதில் உள்ள சென்சார் காதுகளில் இருந்து இயர்பட் எடுக்கப்பட்டதும் ஆடியோவை நிறுத்தி விடுவதோடு, கேசில் இருந்து எடுக்கப்பட்டதும் போனுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.இயர்பட்ஸ் கேசுடன் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். பட்ஸ் கியூ மாடலின் இயர்பட்ஸ் 4.5 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. புதிய ரியல்மி பட்ஸ் கியூ பிளாக், வைட் மற்றும் எல்லோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago