Skip to main content

தனிமை படுத்தப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு

May 31, 2020 331 views Posted By : YarlSri TV
Image

தனிமை படுத்தப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு  

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் நாக்பூரில் இருந்து சந்திராப்பூர் ஷியாம் நகருக்கு வந்த 30 வயது வாலிபர் ஒருவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தார். நேற்று காலை அந்த வாலிபர் அறையில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.இந்தநிலையில், அந்த மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரை நேற்று காலை அவரது குடும்பத்தினர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் எந்த அழைப்புகளையும் எடுக்கவில்லை.இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அறையில் சென்று பார்த்தார். அப்போது அங்கு அவர் இறந்து கிடந்தார். இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தனிமை மையத்தில் ஒரே நாளில் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. அந்த நபர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை