40 நாட்கள் நடுகாட்டுக்குள் தங்கியிருந்த நடிகை ஆண்ட்ரியா
May 24, 2020 219 views Posted By : YarlSri TV
40 நாட்கள் நடுகாட்டுக்குள் தங்கியிருந்த நடிகை ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா நடித்த ‘கா’ படக்குழுவினர் நடுக்காட்டுக்குள் 40 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தி விட்டு திரும்பியிருக்கிறார்கள். இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் நாஞ்சில் கூறியதாவது:-
“கா என்றால் காடு என்று அர்த்தம். காட்டுக்குள் நடக்கிற கதை. இதில் ஆண்ட்ரியா வனவிலங்குகளை படம் எடுக்கும் போட்டோகிராபராக நடித்து இருக்கிறார். அவர் நடுக்காட்டுக்குள் தங்கியிருந்து போட்டோ எடுக்கும்போது, ஒரு குற்றம் நடப்பதை பார்த்து விடுகிறார். அதன் விளைவுகள்தான் திரைக்கதை. சலீம்சவுத்ரி வில்லனாக நடித்து இருக்கிறார்.
“ஆண்ட்ரியாவிடம் நான் கதை சொல்ல புறப்பட்டபோது, அவர் ரொம்ப ‘செலக்டிவ்’ ஆக இருப்பார்...அவரிடம் கதை சொல்லி எளிதில் சம்மதம் வாங்க முடியாது என்று சில நண்பர்கள் சொன்னார்கள். நான் அரைமனதோடுதான் சென்றேன். அவரை நேரில் பார்த்தபோது, நான் கற்பனை செய்த பிம்பத்துக்கும், உண்மையான ஆண்ட்ரியாவுக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது.
அவர் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். நடித்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாதவர். கதையை முழுமையாக கேட்டார். முடிவில், சம்மதம் சொன்னார். இந்த படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது. தலக்கோணம், மூணாறு ஆகிய இரண்டு காடுகளிலும் படப்பிடிப்பை நடத்தினோம்.
நான் ஒரு புது டைரக்டர் என்று என்னை ஆண்ட்ரியா அலட்சியமாக நடத்தவில்லை. நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார். மூணாறு காட்டில் படப்பிடிப்பு நடத்தியபோது, அட்டை பூச்சிகள்தான் பெரும் சவாலாக இருந்தது. தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் அனைத்து சவுகரியங்களையும் செய்து கொடுத்து, எங்களை பாதுகாப்பாக கவனித்துக்கொண்டார்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1142 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1142 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1142 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1142 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1142 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1142 Days ago